யாழில் நேற்றிரவு நடந்த கொடூரம் -மகனின் தாக்குதலில் ஸ்தலத்திலேயே பலியான தந்தை
மனநிலை பாதிக்கப்பட்ட மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு நிலாவரை புத்தூர் - இராசபாதை வீதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரே உயிரிழந்தார்.
தாக்குதலுக்கு உள்ளான தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அச்சுவேலி பொலிஸார், தாக்குதல் நடத்தியவரைத் தேடி வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026