விஜய்யை விவாகரத்து செய்த பின்னர்... அமலா பால் ஓபன் டாக்

விஜய்யை விவாகரத்து செய்த பின்னர்... அமலா பால் ஓபன் டாக்

பிரபல இயக்குனரான விஜய்யை விவாகரத்து செய்த பின்னர் தன்னுடைய நிலை குறித்து நடிகை அமலா பால் வெளிப்படையாக பேசியுள்ளார்.

தமிழில் மைனா, வேட்டை, தெய்வத்திருமகள் உட்பட பல வெற்றி படங்களில் நடித்தவர் அமலாபால்.

திரையுலகில் உச்சத்தில் இருந்த போது, இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

எனினும் கருத்து வேறுபாடால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர், இதன்பின்னர் அமலாபால் நடிப்பதில் முழுகவனம் செலுத்தினார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் நடிகை அமலாபால் விவாகரத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றி பேசி உள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, நான் விவாகரத்து செய்து பிரிந்தபோது எனக்கு யாரும் ஆதரவு தரவில்லை. எல்லோரும் என்னை பயமுறுத்த முயற்சி செய்தனர்.

நான் முன்னணி நடிகையாக இருந்தபோதிலும் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது எனது மனநிலை பற்றியோ, எனது மகிழ்ச்சியான வாழ்க்கை பற்றியோ யாரும் கவலைப்படவில்லை என தெரிவித்துள்ளார்.