நான்கு பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக பலி

நான்கு பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக பலி

கிளிநொச்சி - கந்தபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தபுரம் பொதுச்சந்தையின் பின்புற வீதியில் அமைந்துள்ள அரிசி ஆலை ஒன்றில் அலுமினிய பொருத்து வேலைகளுக்காக வந்திருந்த குறித்த குடும்பஸ்தர், நெல் பதப்படுத்தும் தொட்டிபொருத்து வேலை முடித்து கீழே இறங்குவதற்காக படியில் கால் வைத்த போதே குறித்த நபர் தவறி விழுந்துள்ளார்.

அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றும் சிகச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் நான்கு பிள்ளைகளின் தந்தை எனவும் இவர் மட்டகளப்பைச் சேர்ந்த இராமையா விஜயரத்தினம்(54) எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்