தொடருந்தினால் மோதப்பட்டு 20 வயது இளைஞர் பலி!

தொடருந்தினால் மோதப்பட்டு 20 வயது இளைஞர் பலி!

காலி-மினுவன்கொட சுரங்கத்துக்கு அருகில் தொடருந்தினால் மோதப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலி முதல் மாத்தறை நோக்கி பயணித்த தொடருந்தினால் மோதுண்டே இந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக காவல்துறை குறிப்பிடுகின்றது.

உயிரிழந்தவர் தவலம-ஹபரகட பகுதியை சேரந்த 20 வயதான ஒருவர் என காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது