
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை
நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய மத்திய,சப்ரகமுவ,தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன்,கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் இன்று காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என கூறப்பட்டுள்ளது