கல்வி அமைச்சர் வௌியிட்ட தகவல் - இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

கல்வி அமைச்சர் வௌியிட்ட தகவல் - இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

மேல் மாகாணத்தில் பாடசாலை திறப்பது குறித்து எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மேல் மாகாணத்தில் அனைத்து பாடசாலைகளிலும் அனைத்து தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகளையே ஆரம்பிக்க எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து முறையான செயல்முறை எதுவும் அறி விக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளது.

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ஆனால் பாடசாலைகள் ஆரம்பிக்கும் போது முறையான செயல்முறை முன்னெடுக்கவேண்டும்.

இந்நிலையில் பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைத்து வரும் போது சுகாதார பாதுகாப்பு, கொரோனா தொற்று தொடர்பாக அவதானம் போன்ற முறையான செயல்முறை வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்