சில பிரதேசங்களில் நாளை 18 மணிநேர நீர்வெட்டு

சில பிரதேசங்களில் நாளை 18 மணிநேர நீர்வெட்டு

ஹேகித்த வீதியில் இடம்பெறும் நீர் கட்டமைப்பு விஸ்தரிப்பு நடவடிக்கைகள் காரணமாக சில பிரதேசங்களில் நாளை (31) 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

வனவாசல உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை (31)  இரவு 10 மணி தொடக்கம் முதலாம் திகதி மா​லை 04 மணி வரை 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

வனவாசல, ஒலியமுல்ல, எவரிவத்த வீதி, பலகல, தெலங்கப்பத்த, மீகஸ்வத்தை, ஹேகித்த, பள்ளியாவத்தை மற்றும் எலகந்த ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது