பசறை - பிபிலை வீதியை துரிதமாக புனரமைத்து தருமாறு கோரி லுணுகலையில் ஆர்ப்பாட்டம்

பசறை - பிபிலை வீதியை துரிதமாக புனரமைத்து தருமாறு கோரி லுணுகலையில் ஆர்ப்பாட்டம்

பசறை - பிபிலை வீதியை துரிதமாக புனரமைத்து தருமாறு கோரி லுணுகலை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதி பொதுமக்களால் இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

பசறை - லுணுகலை வீதியின் புனரமைப்புப் பணிகள் மிகவும் தாமதமான முறையில் இடம்பெறுவதாக மக்கள் இதன்போது குற்றம்சாட்டினர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு பிரவேசித்த லுணுகலை காவல்துறை பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் கலந்துரையாடிய பின்னர் அவர்கள் கலைந்து சென்றதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்