உலக உயர் ரத்த அழுத்த தினம் (மே 17)

உலக உயர் ரத்த அழுத்த தினம் (மே 17)

ரத்தக் கொதிப்பு என்னும் உயர் ரத்த அழுத்த நோய் என்பது உலகம் முழுவதும் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மாறுபட்ட உணவு பழக்கவழக்கங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல்நிலையில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 


ரத்தக் கொதிப்பு என்னும் உயர் ரத்த அழுத்த நோய் என்பது உலகம் முழுவதும் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மாறுபட்ட உணவு பழக்கவழக்கங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல்நிலையில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனை சரியான சமயத்தில் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், இறப்புக்கும் வழிவகுக்கும்.
 

 

உலக சுகாதார அமைப்பானது, உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்புகள் மற்றும் சிகிச்சை முறைகள் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒரு உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை 2005-ல் தொடங்கியது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் மே 17-ம் தேதி உலக உயர் ரத்த அழுத்த தினமாக அனுசரிக்க முடிவு செய்து அறிவித்தது.

இந்த நாளில் உலக நாடுகள் அனைத்தும், அரசாங்கங்கள், தொழில்முறை சமுதாயங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுடன் கூட்டுசேர்ந்து பொது பேரணிகள் மூலம் உயர் ரத்த அழுத்த விழிப்புணர்வை ஊக்குவித்து வருகின்றன. இணையதளம் மற்றும் தொலைக்காட்சி போன்ற வெகுஜன ஊடகத்திலும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் இடம்பெறுகின்றன.