
வட மாகாணத்தில் வாகன வருமான வரிப்பத்திரம் வழங்கல் இடைநிறுத்தம்!
வட மாகாணத்தில் பதிவான வாகனங்களுக்கான வருமான வரி பத்திரம் வழங்கல் நடவடிக்கை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் காலாவதியாகும் வருமான வரிப்பத்திரங்களை, மீள புதுப்பிக்கும்போது, எவ்வித அபராதமும் விதிக்கப்படமாட்டாது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.