கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 1,243 ஆக உயர்வு!

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 1,243 ஆக உயர்வு!

கொவிட் 19 நோயால் நேற்றைய தினம் 33 பேரின் மரணங்கள் பதிவாகியிருந்தன.

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் கொவிட்-19 நோயால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,243 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நேற்று (24) பதிவான 33 கொவிட் மரணங்களுள் 5 பேரின் மரணங்கள் நேற்று (24) திங்கட்கிழமை இடம்பெற்றதுடன், கடந்த 17 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 28 பேரின் மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த காலப்பகுதியில் மரணித்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் கொவிட் நோயால் மரணித்தவர்கள் என உறுதிசெய்யப்பட்டு நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது.

இதன்படி, நேற்று பதிவான கோவிட் 19 மரணங்களில் ஐந்து மரணங்கள் நாவலப்பிட்டி பிரதேசத்தில் பதிவாகியிருந்தன.

அதேநேரம் மட்டக்களப்பு, மதவாச்சி, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் கொவிட் மரணங்கள் பதிவாகி இருந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அவர்களில் எண்மர் வீட்டிலேயே மரணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நேற்று பதிவான கொவிட் மரணங்களில், கினிமல்லகஹா பகுதியில் வசித்த 104 வயதான பெண் ஒருவரின் மரணமும் உள்ளடங்குகிறது.