
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் தீப்பரவலால் கடலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் முறைப்பாடு!
கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பகுதியில் தீக்கிரையான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் மாலுமி மற்றும் அக்கப்பலின் தாய் நிறுவனத்துக்கு (parent company) எதிராக சட்டநடவடிக்கை எடுக்கக்கோரி முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது.
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் கொழும்பு துறைமுக காவல்நிலையத்தில் இந்த இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
கடல்சார் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.