கொழும்பு மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் வெகுவாக அதிகரித்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை

கொழும்பு மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் வெகுவாக அதிகரித்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை

கொழும்பு மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 50,000 கடந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் நேற்று 501 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் இம்மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 50,884 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 3306 தொற்றாளர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். அதனடிப்படையில் இம்மாவட்டத்தில் 1004 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

பதுளை,களுத்துறை ,குருநாகலை,கேகாலை, அனுநாரபுரம் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.