
நேற்று அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான விபரங்கள்!
நாட்டில் நேற்று (05) 3,103 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களில் 3,094 பேர் புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியுள்ளனர்.
9 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடுதிரும்பியவர்களாவர்.
இதற்கமைய, தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை, 202,357 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 34, 569 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 1,851 பேர் நேற்று (05) குணமடைந்தனர்.
இதற்கமைய, கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 166,132 ஆக அதிகரித்துள்ளதென தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.