பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, குறித்த பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜூன் 26 முதல் ஜூலை 21, 2025 வரை விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் (Online) கோரப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனைத்து பாடசாலை விண்ணப்பதாரர்களும் தங்கள் விண்ணப்பங்களை தங்கள் பாடசாலை அதிபர் மூலமாக நிகழ்நிலையில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தனியார் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அறிவுறுத்தல்களின்படி நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு | 2025 Advanced Level Examination Date Al Exam

அத்துடன், தனியார் விண்ணப்பதாரர்களும் தங்கள் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஐப் பார்வையிட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.