
9 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் இதனைத் தெரிவித்துள்ளது.
நாளை (08) பிற்பகல் 4.30 வரை இந்த அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.