குளவி கொட்டி கணவர் உயிரிழப்பு மனைவி வைத்தியசாலையில்

குளவி கொட்டி கணவர் உயிரிழப்பு மனைவி வைத்தியசாலையில்

அம்பாந்தோட்டை , அங்குனுகொலபெலெஸ்ஸ பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி கணவர் உயிரிழந்துள்ளதுடன் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்குனுகொலபெலெஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 69 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் தனது மனைவியுடன் இணைந்து தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்கச் சென்றுள்ளார் .

குளவி கொட்டி கணவர் உயிரிழப்பு மனைவி வைத்தியசாலையில் | Husband Dies Stung By A Wasp Wife Hospitalized

இதன்போது தென்னந்தோப்பில் இருந்த குளவி கூடு ஒன்று கலைந்ததால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குளவி கொட்டுக்கு இலக்காகிய கணவரும் மனைவியும் பிரதேசவாசிகளின் உதவியுடன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது கணவர் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மனைவி எம்பிலிப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.