
முதலாவது ஹாரிபாட்டர் நூல் வெளியிடப்பட்ட நாள்
ஹாரிபாட்டர் சிறுவர் கனவுருப் புனைவு புதின வரிசையாகும். இது ஜே.கே.ரௌலிங் என்ற பிருத்தானிய பெண் எழுத்தாளரால் எழுதப்பட்டது. இப்புத்தகங்களில் சில திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. இக்கதையை மையமாக வைத்து கணினி விளையாட்டுக்களும் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. 1997- ஜுன் மாதம் 30-ந் தேதி ரெளலிங் ஹரி போட்டர் தொடரில் முதலாவது புத்தகத்தை வெளியிட்டார். இது வணிக நோக்கில் பெருமளவு வெற்றி பெற்றது. இதுவரை வெளிவந்த புத்தகங்களின் 300 மில்லியன்
ஹாரிபாட்டர் சிறுவர் கனவுருப் புனைவு புதின வரிசையாகும். இது ஜே.கே.ரௌலிங் என்ற பிருத்தானிய பெண் எழுத்தாளரால் எழுதப்பட்டது. இப்புத்தகங்களில் சில திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. இக்கதையை மையமாக வைத்து கணினி விளையாட்டுக்களும் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. 1997- ஜுன் மாதம் 30-ந் தேதி ரெளலிங் ஹரி போட்டர் தொடரில் முதலாவது புத்தகத்தை வெளியிட்டார். இது வணிக நோக்கில் பெருமளவு வெற்றி பெற்றது. இதுவரை வெளிவந்த புத்தகங்களின் 300 மில்லியன் படிகள் உலகளாவிய வெளியில் விற்றுத் தீர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை இந்தப் புத்தகம் 63 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
கதையின் பெரும் பகுதி ஹாக்வாட்ஸ் எனும் மந்திர தந்திரங்களைக் கற்பிற்கும் பாடசாலையிலேயே இடம் பெறுகின்றது. அத்துடன் கதையின் நாயகனுக்கும் கொடிய மந்திரவாதியான வால்டமோட் என்பவருக்கும் இடையிலான சண்டையையே பெருமளவு கதை சுற்றி இருக்கின்றது.
இந்தப் புத்தகங்களின் வெற்றியைத் தொடர்ந்து எழுத்தாளர் இலக்கிய வரலாற்றில் ரௌலிங் அவர்கள் பெரும் பணக்கார எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்தப் புத்தகங்களை ஐக்கிய இராச்சியத்தில் புளூம்பரி நிறுவனமும் அமேரிக்காவில் ஸ்கொலாஸட்டிக் பிரஸ்சும், கனடாவில் ரெயின் கோஸட் புக்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் அலன் & அன்வின் நிறுவனமும் வெளியிட்டுள்ளன.
1990-ம் ஆண்டில் ஒருநாள் மக்கள் மிகுந்த தொடருந்தில் மான்செஸ்டரில் இருந்து லண்டன் நோக்கி எழுத்தாளர் ரெளலிங் அவர்கள் பயனித்துக் கொண்டு இருந்தபோதே இந்தக் கதைக்கான எண்ணம் அவர் மனதில் உதித்தது. இதன் போது அந்தக் கருவை மறந்து விடாமல் இருக்க தன் கைக்குட்டையில் அதை எழுதி வைத்து விடுகின்றார். இதுபற்றி ரெளலிங் தனது இணைய தளத்திலும் கூறியுள்ளார்.
அதேநாள் மாலை நேரம் தனது முதலாவது புத்தகமான ஹரிபொட்டர் அன்ட் த பிலோசபர்ஸஸ் ஸ்டோன் என்ற புத்தகத்திற்கான ஆரம்ப வேலைகளை ஆரம்பிக்கின்றார். அத்துடன் தான் எழுத இருக்கும் ஏழு ஹரி பொட்டர் புத்தகங்களின் பாதையை வகுப்பதுடன் பெருமளவான கற்பனைப் பாத்திரங்களையும், கற்பனை மந்திர உலகையும் ஏற்படுத்திக் கொண்டார்.
மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-
* 1912 - கனடாவில் ரெஜினா என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 28 பேர் கொல்லப்பட்டனர்.
* 1937 - உலகின் முதலாவது அவசரத் தொலைபேசி எண் (999) லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.
* 1956 - அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் அரிசோனாவில் மோதிக் கொண்டதில் 128 பேர் கொல்லப்பட்டனர்.
* 1960 - காங்கோ பெல்ஜியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
* 1971 - சோவியத்தின் சோயுஸ் 11 விண்கலத்தில் ஏற்பட்ட காற்றுக் கசிவினால் விண்வெளி வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர்.
* 1972 - ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் வினாடி அதிகரிக்கப்பட்டது.
* 1985 - பெய்ரூட்டில் 17 நாட்களாகக் கடத்தப்பட்டிருந்த 39 அமெரிக்க விமானப் பயனிகள் விடுவிக்கப்பட்டனர்.
* 1990 - கிழக்கு, மற்றும் மேற்கு ஜெர்மனிகள் தமது பொருளாதாரத்தை ஒருங்கிணைத்தன.
* 1997 - ஹாங்காங் நாட்டின் அதிகாரம் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீனாவுக்குக் கைமாறியது.
* 2002 - பிரேசில் தனது ஐந்தாவது உதைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்தை வென்றது.