நெல் அறுவடையை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!
அரிசி விவசாயிகளிடமிருந்து நெல் அறுவடையை நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஒரு கிலோ நாட்டரிசி 50 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 52 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 52 ரூபாவுக்கும் கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.