
டெங்கு ஒழிப்புக்கு மோப்ப நாய்களைப் பயன்படுத்த தீர்மானம்!
டெங்கு நுளம்புகள் உருவாகக்கூடிய இடங்களை கண்டறிவதற்காக மோப்ப நாய்களை பயன்படுத்த தீர்மானிப்பக்கட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்காக கண்டி மோப்ப நாய்கள் பிரிவின் ஜொனி மற்றும் ரோமா என்ற இரண்டு நாய்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய, எதிர்காலத்தில் சுற்றாடல் பிரிவு காவல்துறை அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு இந்த மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.