
பால்மா விலை சலுகையால் அரசாங்கத்திற்கு மாதம் 572 மில்லியன் ரூபா இழப்பு
பால்மா விலை உயர்வடைவதை தடுப்பதற்காக அரசாங்கத்தினால் கடந்த 11 ஆம் திகதி முதல் பால்மா நிறுவனங்களுக்கு வரிச் சலுகையை வழங்கியுள்ளது.
இதன் காரணமாக, அரசாங்கத்திற்கு மாதம் ஒன்றிற்கு 572 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவர்ட் கப்ரால் தெரிவித்தார்.
பால் மாவின் விலையை சீராக வைத்திருப்பதற்காக அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு இதன் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.