தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் - மனைவி, மாமி, மைத்துனியை தீ வைத்து எரித்த கணவன்

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் - மனைவி, மாமி, மைத்துனியை தீ வைத்து எரித்த கணவன்

மொரட்டுவையில் மனைவி, தாய் மற்றும் மைத்துனியை பெட்ரோல் ஊற்றி எரித்து தலையில் தாக்கியதற்காக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தீக்காயமடைந்த மூவரும் தற்போது பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரின் மனைவியான 28 வயதான இரண்டு பிள்ளை தாய் மற்றும் மனைவியின் தாய் மற்றும் மைத்துனி ஆகியோர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததாக தெரியவந்துள்ளது.

குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் - மனைவி, மாமி, மைத்துனியை தீ வைத்து எரித்த கணவன் | Husband Burned Whole Family In Colombo

இந்த சம்பவம் நேற்று மதியம் 12:20 மணியளவில் மொரட்டுவ, பகுதியில் உள்ள வீட்டில் நடந்துள்ளது.

மனைவி சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பி வந்து மீண்டும் வெளிநாடு திரும்ப ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.

கணவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த விடயம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

அதற்கமைய, அவர்கள் அனைவரும் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்திற்குச் சென்று வீடு திரும்பிய பின்னர் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேக நபரின் மனைவி மற்றும் மாமியார் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் - மனைவி, மாமி, மைத்துனியை தீ வைத்து எரித்த கணவன் | Husband Burned Whole Family In Colombo

தனது மனைவி மீது ஆசிட் தாக்குதல் அல்லது அவர் வெளிநாடு செல்வதைத் தடுப்பேன் என சந்தேக நபர் பலரிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் சிவில் பாதுகாப்பு வீரர் எனவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.