மாவட்ட ரீதியாக இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொவிட் தொற்றாளர்கள்

மாவட்ட ரீதியாக இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொவிட் தொற்றாளர்கள்

கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் 96,454 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்களில் கொரோனா மூன்றாவது அலையில் தொற்று உறுதியான 64,157 பேரும் அடங்குகின்றனர்.

கம்பஹா மாவட்டத்தில் இதுவரையில் 77, 633 பேருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தில் கொவிட்-19 தொற்று உறுதியான 43,332 பேர் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த மூன்று மாவட்டங்களை தொடர்ந்து காலி மாவட்டத்திலேயே அதிகளவானோருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

காலி மாவட்டத்தில் இதுவரையில் 22,996 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.