விசேட பொருளாதார மையங்களை மேலும் இரு தினங்களுக்கு திறக்க அனுமதி!
மெனிங் சந்தை மற்றும் நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மையங்களையும் மேலும் இரு தினங்களுக்கு திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷசீந்த்ர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்து பொருளாதார மையங்களும் திறக்கப்படவுள்ளன.
இதன்போது, மொத்த விற்பனைக்காக மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.