ஆழ்கடலில் அதிரடி வேட்டை: போதைப்பொருள் படகுடன் 6 பேர் கைது!

ஆழ்கடலில் அதிரடி வேட்டை: போதைப்பொருள் படகுடன் 6 பேர் கைது!

இலங்கைக்கு தென்மேற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் உள்நாட்டு பலநாள் மீன்பிடி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. 

இந்த விசேட நடவடிக்கையின் போது படகுடன் சேர்த்து 6 சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகு மற்றும் 6 சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் தரைக்கு அழைத்து வரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

தேசிய பாதுகாப்பிற்காக நாட்டைச் சூழவுள்ள கடல் வலயங்களை உள்ளடக்கிய வகையில் கடற்படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளின் போதே இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது.