நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி பற்றி எரிந்த மோட்டார் வாகனம்
ஹைலெவல் வீதியின் தெல்கந்த பகுதியில் உள்ள ரிவி தெரண கலையகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ஔிப்பதிவு உபகரணங்களை ஏற்றி வந்த லொறியுடன் மோட்டார் வாகனம் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
நேற்று (10) இரவு 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோட்டர் வாகனம் மோதியதில் ஏற்பட்ட தீயில் இரு வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளது.
மோட்டார் வாகனத்தில் பயணித்த இருவர் காயங்களுக்கு உள்ளாகி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.