
நொடிப்பொழுதில் ஆற்றில் மூழ்கிய பிரம்மாண்ட வீடு: பதபதைக்க வைக்கும் பகீர் காட்சி
இந்திய மாநிலமான தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் பிரம்மாண்டமான வீடு நொடிப்பொழுதில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட காட்சி பதைபதைக்க வைத்துள்ளது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், ஆறுகள், குளங்கள் நிரம்பி வழிவதுடன் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஐதர்புரம் கிராமம் கனமழையால் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பிரம்மாண்ட மாடி வீடு ஒன்று அடித்துச்செல்லப்பட்டுள்ள காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீடு பாலாறு ஆற்றங்கரையில் இளங்கே என்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டுள்ள நிலையில், வீட்டின் பின்னே விரிசல் ஏற்பட்டுள்ளதை நேற்றைய தினம் அவதானித்துள்ளனர். உடனே வீட்டில் இருந்தவர்கள் நேற்றே வீட்டை காலி செய்துள்ளனர்.
இன்று மண்அரிப்பு ஏற்பட்டு குறித்த வீடு முற்றிலுமாக ஆற்றில் மூழ்கியுள்ளது.