இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் கனேடிய பிரதமரும் பங்கேற்பு

இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் கனேடிய பிரதமரும் பங்கேற்பு

அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளோய்ட் பொலிஸாரால் கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராக தொடங்கிய போராட்டம் தற்போது உலகம் முழுவதும் வியாபித்து நிற்கின்றது.

இந்தநிலையில் இனவெறிக்கு எதிரான போராட்டம் கனேடியப் நாடாளுமன்றம் முன்னாலும் நடத்தப்பட்டுள்ளது.

இந்தப்போராட்டத்தில் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோவும் கலந்துகொண்டு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

மக்களுடன் இணைந்து இனவாதத்திற்கு எதிராக முழங்கால் மண்டியிடும் வகையில் அவர் போராட்டத்தில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.