
சாத்தான்குளம் விவகாரம்: சி.சி.டி.வி காட்சிகளை மீட்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள சி.பி.ஐ
சாத்தான்குளம் இரட்டைக் கொலை விவகாரம் தொடர்பாக சி.சி.டி.வி காட்சிகளை மீட்கும் நடவடிக்கைகளை சி.பி.ஐ.அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சாத்தான்குளம் விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 5 பொலிஸ் அதிகாரிகளிடம் இரண்டாம் கட்ட விசாரணை இன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த 5 பொலிஸாரையும் சம்பவம் இடம்பெற்றிருந்த இடத்திற்கு நேரடியாக அழைத்துச் சென்றும் விசாரணையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர், சாத்தான்குளம் பொலிஸ் நிலையத்தில் இருந்தபோது பதிவான சி.சி.டி.வி காட்சிகள் அழிக்கப்பட்ட நிலையில், அவற்றை மீட்கும் பணிகளை சி.பி.ஐ.அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
குறித்த பணிகளை, தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியுடன் சி.பி.ஐ.அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.