
தாலி கட்டும் நேரத்தில் திடீரென மயங்கி விழுந்த மணப்பெண் - அதிர்ச்சியில் உறைந்த மாப்பிள்ளை வீட்டார்
சென்னை அடுத்த பாடியை சேர்ந்தவர் தினகரன்(35). இவர் ஐடி-யில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கூடுவாஞ்சேரி பகுதியை அடுத்த பெரியார் நகரைச் சேர்ந்த கிருத்திகா(31) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, திருமணம் ஏற்பாடுகள் நடைப்பெற்ற நிலையில், கிருத்திகாவுக்கு தாலிக்கட்டிய நேரத்தில் மணப்பெண் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அங்கு கூடியிருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கிருத்திகாவை உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். பரிசோதனையில் ஏதுவும் இல்லை.. சாதாரண வயிற்று வலி தான் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பின்னர் குடும்பத்தினர்கள் விசாரிக்கையில், கிருத்திகா இன்னொருவரை காதலிப்பதாகவும், அதனால் தான் பதற்றத்தில் மயங்கியதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
திருமணத்திற்காக செலவு செய்த பணத்தை பெண் வீட்டார் திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. பின் திருமணத்திற்காக செலவு செய்த பணத்தை பெண் வீட்டார் திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் அதில் கூற கொடுத்துள்ளனர்.