நாட்டில் மேலும் 232 பேருக்கு கொவிட்
நாட்டில் இன்று (29) மேலும் 232 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 661, 285 ஆக அதிகரித்துள்ளது.