
நாளை முதல் தூர பிரதேசங்களுக்கான தொடருந்து சேவைகள் முன்னெடுப்பு
நாளை (14) முதல் பல தூர பிரதேசங்களுக்கான தொடருந்து சேவைகளை முன்னெடுக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை முதல் கல்கிசை - காங்கேசன்துறை, கொழும்பு - பதுளை மற்றும் மருதானை - பெலியத்த ஆகிய தொடருந்து நிலையங்களுக்கு இடையில் இந்த விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கல்கிசை முதல் காங்கேசன்துறை வரை (புறப்படும் நேரம் காலை 6.30)
காங்கேசன்துறை முதல் கல்கிசை வரை (புறப்படும் நேரம் காலை 9 மணி)
கொழும்பு - கோட்டை முதல் பதுளை வரை (புறப்படும் நேரம் காலை 5.55 - ஊரடங்கு காலப்பகுதியில் காலை 6.45)
பதுளை முதல் கொழும்பு - கோட்டை வரை (புறப்படும் நேரம் காலை 5.45 - ஊரடங்கு காலப்பகுதியில் 6.15)
மருதானை முதல் பெலியத்த வரை (பிற்பகல் 2.30)
பெலியத்த முதல் மருதானை வரை ( பிற்பகல் 5.25 - ஊரடங்கு காலத்தில் காலை 6.25)