நாளை முதல் தூர பிரதேசங்களுக்கான தொடருந்து சேவைகள் முன்னெடுப்பு

நாளை முதல் தூர பிரதேசங்களுக்கான தொடருந்து சேவைகள் முன்னெடுப்பு

நாளை (14) முதல் பல தூர பிரதேசங்களுக்கான தொடருந்து சேவைகளை முன்னெடுக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை முதல் கல்கிசை - காங்கேசன்துறை, கொழும்பு - பதுளை மற்றும் மருதானை - பெலியத்த ஆகிய தொடருந்து நிலையங்களுக்கு இடையில் இந்த விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கல்கிசை முதல் காங்கேசன்துறை வரை (புறப்படும் நேரம் காலை 6.30)

காங்கேசன்துறை முதல் கல்கிசை வரை (புறப்படும் நேரம் காலை 9 மணி)

கொழும்பு - கோட்டை முதல் பதுளை வரை (புறப்படும் நேரம் காலை 5.55 - ஊரடங்கு காலப்பகுதியில் காலை 6.45)

பதுளை முதல் கொழும்பு - கோட்டை வரை (புறப்படும் நேரம் காலை 5.45 - ஊரடங்கு காலப்பகுதியில் 6.15)

மருதானை முதல் பெலியத்த வரை (பிற்பகல் 2.30)

பெலியத்த முதல் மருதானை வரை ( பிற்பகல் 5.25 - ஊரடங்கு காலத்தில் காலை 6.25)

No description available.