மேலும் ஒரு தொகை டீசல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது!

மேலும் ஒரு தொகை டீசல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது!

இந்திய கடன் எல்லை வசதி திட்டத்தின் கீழ் மேலும் ஒரு தொகுதி டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது.

டொம் எல்வின் நிறுவனத்தின் ஊடாக குறித்த டீசல் தொகை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இதுவரையில் 400,000 மெற்றிக் டன் எரிபொருள் இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.