கேஸ் விநியோகம் நாளையும் இடம்பெறாது!

கேஸ் விநியோகம் நாளையும் இடம்பெறாது!

நாளைய தினமும் (27) லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, 12.5, 5 மற்றும் 2.3 கிலோ கிராம் ஆகிய சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

இன்றைய தினமும் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் நேற்றைய தினம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.