நாளை முதல் தொடருந்து ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு
நாளை முதல் தொடருந்து ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.
தொடருந்து திணைக்கள பிரதி பொது முகாமையாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தொடருந்து ஆசன முன்பதிவு கட்டணங்கள் வெவ்வேறு பிரிவுகளில் 30 முதல் 65 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சாதாரண தொடருந்து கட்டணம், பொதி சேவை கட்டணம் மற்றும் ஏனைய கட்டணங்கள் எவையும் அதிகரிக்கப்படமாட்டாது என தொடருந்து திணைக்கள பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.