
வெளிவிவகார அமைச்சர் ஜெனீவாவில் அறிக்கை!
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜெனீவா நேரப்படி இன்று மதியம் அவர் குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று ஆரம்பமாகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது அமர்வு எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.