14 வயதில் A/L இல் சாதனை படைத்த மாணவன்
14 வயதில் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் ஒருவனை பற்றிய செய்தி இன்று எமக்கு கிடைத்தது.
கடவத்தை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட தெவும் சனஹஸ் ரணசிங்க என்ற மாணவனே இவ்வாறு இவ்வருடம் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளான்.
குறித்த மாணவன் வர்த்தகப் பிரிவின் ஊடாக இவ்வருடம் உயர்தரப் பரீட்சையில் தோற்றி மூன்று B சித்திகளைப் பெற்று சித்தியடைந்துள்ளான்.
05 மாத குறுகிய காலத்தில் பரீட்சைக்குத் தயாராகி இந்த விசேட சித்தியைப் பெற்றதாக குறித்த மாணவன் தெரிவித்துள்ளான்.
தெவும் சனஹஸ் இதற்கு முன்னர் 08 ஆம் தரத்தில் கல்வி கற்கும் போது சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
07 மாத குறுகிய காலத்தில் அதற்குத் தயாராகியிருக்கும் குறித்த மாணவன் சாதாரண தரப் பரீட்சையில் 5 A, 2 B மற்றும் 1 C தேர்ச்சியை பெற்று பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.