பாராளுமன்றில் 2 நிமிட மௌன அஞ்சலி!
பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இலங்கை பாராளுமன்றில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கோரிக்கைக்கு அமைய 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9.30 வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026