தாய் காரணமாக தந்தையை கொலை செய்த மகன்!
குடிபோதையில் தனது தாயை துன்புறுத்தி தாக்கிய தந்தையை அவரது மகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் ஹந்த ஒலுவ பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என ஊருபொக்க பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (08) இரவு அவர்களது வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்கொலை தொடர்பில் 17 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026