ASIA Cup Final - நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அணி இதோ!

ASIA Cup Final - நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அணி இதோ!

ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியின் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்றுள்ளது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்க பாகிஸ்தான் அணியின் தலைவர் தீர்மானித்துள்ளார்

துபாய் மைதானத்தில் இன்னும் சிறிது நேரத்தில் போட்டி ஆரம்பமாக உள்ளது.

அதிக ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிகளில் இலங்கை அணி விளையாடியுள்ளதுடன், இன்று இலங்கை 12ஆவது முறையாக ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.

5 தடவைகள் ஆசிய சாம்பியனாக மகுடம் சூடிய இலங்கை, தற்போது அதிக ஆசிய கிண்ணங்களை வென்ற அணிகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதுவரை 4 ஆசிய கிண்ண இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான், இன்று 5வது ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது.

இதன்படி 8 வருடங்களுக்குப் பின்னர் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றும் நோக்கில் தசுன் ஷானக தலைமையிலான இலங்கை அணியும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் துபாய் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.