6 வயது சிறுமி சந்தேகத்துக்கிடமான முறையில் மரணம்

6 வயது சிறுமி சந்தேகத்துக்கிடமான முறையில் மரணம்

பாணந்துறை - ஹிரண, பின்கெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (7) பிற்பகல் 6 வயது சிறுமி ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஹிரண காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தாய் மற்றும் தாயின் சட்டரீதியற்ற கணவருடன் வசித்து வந்த குறித்த சிறு பல நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும், அவருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டிருக்கவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிறுமி இதற்கு முன்னர் பல தடவைகள் தாயின் துணைவரால் தாக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கேட்டல் மற்றும் பேச்சு குறைபாடுகளை கொண்ட இந்த சிறுமியின் உடலில் பல தழும்புகள் மற்றும் வீக்கங்கள் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த மரணம் தொடர்பாக சிறுமியின் தாயான 25 வயதான பெண்ணொருவரும், அவரது கணவர் எனக்கூறப்படும் 29 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

சடலம், பிரேத பரிசோதனைக்காக களுபோவில - கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை ஹிரண காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.