புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் 7,000 பேருந்துகள் சேவையில்...!

புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் 7,000 பேருந்துகள் சேவையில்...!

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.

இந்த போக்குவரத்து திட்டம் இன்று (07.04.2023) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா குறிப்பிட்டுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் எதிர்வரும் 18ஆம் திகதி வரை 7,000 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் 7,000 பேருந்துகள் சேவையில்...! | 7 000 Buses In Service

நகரங்களுக்கும் புறப்படும் பேருந்துகள்

இன்று (07.04.2023) முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து நகரங்களுக்கும் பேருந்துகள் புறப்படும் என்றும் ஏப்ரல் 15ஆம் திகதி முதல் ஏப்ரல் 18ஆம் திகதி வரை அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் கொழும்பிற்கு விசேட பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டுக்காகக் கொழும்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்வோரின் வசதிக்காக 3,000 தனியார் பேருந்துகளும், 4,000 இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளும் விசேட போக்குவரத்துத் திட்டத்தின் ஒரு பகுதியாகச் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதற்கிடையில், மேலும் 300 பேருந்துகள் அவசர தேவைகளுக்காகத் தயார் நிலையில் இருக்கும் என்றும் மத்திய பேருந்துகள் நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.