
கொரோனா விவகாரம் : இந்தியாவின் உதவியை நாடும் பிரான்ஸ்!
கொரோனா தடுப்பு சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து என்பவற்றில் இந்தியாவின் ஒத்துழைப்பை பிரான்ஸ் எதிர்பார்பதாக அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்திலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேற்கு வங்கம், மற்றும் ஒடிசாவில் பேரழிவை ஏற்படுத்திய அம்பான் புயலால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை வழங்க பிரான்ஸ் அரசு தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா மருந்து மற்றும் சிகிச்சை அனைவருக்கும் கிடைக்க இந்தியாவின் ஒத்துழைப்பை பிரான்ஸ் எதிர்பார்பதாகவும், இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிக முக்கியமானதாக கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.