கீழடி அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

கீழடி அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கீழடியில் அமைக்கப்பட உள்ள அருங்காட்சியகத்துக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

தமிழர் பெருமையினை பறைசாற்றும் வகையில் ரூ.12.25 கோடியில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட இருக்கிறது.

கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை கொண்டு கொந்தகையில் அருங்காட்சியம் அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.