கல்லடி பாலம் முடக்கப்படும் - மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தில் பகிரங்கம்..!

கல்லடி பாலம் முடக்கப்படும் - மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தில் பகிரங்கம்..!

மட்டக்களப்பு கடற் பரப்பில் சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதை தடை செய்யக் கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

வாலைச்சேனை பேத்தாலை போன்ற இடங்களில் இருந்து வந்து மீன்களுக்கு வெடி வைப்பதனால் மட்டக்களப்பு மீனவர்கள் பாதிப்புக்குள்ளாகவதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த மீனவர்களது பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கல்லடி பாலத்தை முடக்கி பாரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள தயாராக உள்ளதாகவும் எச்சரித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.