போலி நாணயத்தாள்களுடன் இரண்டு பேர் கைது..!
போலி நாணயத்தாள்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏ-9 வீதியின் ஆனையிறவு வீதித் தடையில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்து 5,000 ரூபா போலி நாணயத்தாள்கள் 250 மற்றும் 500 ரூபா போலி நாணயத்தாள்கள் 27 என்பன மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர் ஒருவரும், முச்சக்கரவண்டி சாரதி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.