
47 வயது பெண் வன்புணர்வு -27 வயது இளைஞனும் தந்தையும் கைது!
47 வயதான பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 27 வயதுடைய இளைஞன் மற்றும் அவனது தந்தை இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெசாக் போயா தினமான நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞன் வெலிகந்த சிங்கபுர பகுதியைச் சேர்ந்தவர். பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண் பொலனறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டு வீட்டிற்கு வந்த இளைஞன், வீட்டில் யாரும் இல்லாததை உணர்ந்து பெண்ணை வன்புணர்வு செய்துள்ளதாக காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அப்போது, பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் குறித்த நபரை மடக்கிப் பிடித்த போதும், இளைஞனின் தந்தை வந்து அவரை மீட்டுள்ளார்.
எனினும், இந்த சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞனும் தந்தையும் வெலிகந்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.