சாரதியின் கவனயீனத்தால் தமிழர் பகுதியில் விபத்து..!
மன்னார் தள்ளாடிக்கும் பெரிய பாலத்திற்கும் இடையில் சிறிய ரக வாகனம்(கெப் வாகனம்) வீதியோர கற்களில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தானது இன்று(7) அதிகாலை இரண்டு மணியளவில் நிகழ்ந்துள்ளது.
குறித்த வாகனத்தில் மன்னார் சிலாவத்துறை வேப்பங்குளம் பகுதியில் இருந்து கடல் உணவு ஏற்றி வந்துள்ளனர்.
இதன் போது குறித்த வாகனத்தின் சாரதி நித்திரை கலக்கத்தில் வீதியோர கற்களில் மோதி வாகனம் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டது.
குறித்த வாகனத்தின் சாரதி காயங்களுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.