அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - வெளியான அறிவிப்பு..!
கடந்த காலாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், அரசு விரும்பிய இலக்குகளை எட்டினால், மக்கள் பயன்பெறுவார்கள் என தெரிவித்தார்.
“நாம் தற்போது வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளோம்.
இதன் மூலம் இந்நாட்டு மக்கள் இலகுவாக பலன் அடைந்துள்ளனர். நாட்டின் பொருளாதாரம் சீரமைக்கப்பட்டதன் பின்னர் அரச ஊழியர்களுக்கு இறுதிவரை சம்பள உயர்வை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளாார்.
இது தொடர்பில் அவர் மிகத் தெளிவாகத் உள்ளார்.
இதன் அடிப்படையில் பணம் சேகரிப்பது, வருவாயை அதிகரிப்பது என அரசாங்கம் இந்த விடயங்களை மேற்கொண்டால் அரசு ஊழியரும் பயன்பெறக்கூடும்.” என தெரிவித்துள்ளார்.