கட்டுநாயக்காவில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் - எடுக்கப்பட்டுள்ள மாற்று நடவடிக்கை
தற்போது கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், சர்வதேச நாடுகளில் இருந்து இலங்கை நோக்கி வருகை தந்த சில விமானங்கள் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது்
கடும் மழை காரணமாக கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை நோக்கி வரும் விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு சில விமானங்கள் தரித்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.